நடுக்காட்டுக்குள் இருந்த சாராய ஆறு...ரகசிய தகவலால் வெளிவந்த பகீர் உண்மைகள்

Update: 2024-03-29 11:23 GMT

குமரத்துகுடிபட்டி அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து சிங்கம்புணரியைச் சேர்ந்த ராமசாமி மனைவி மங்கலம், சட்ட விரோதமாக மதுபான ஆலை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வந்த ரகசிய தகவலை அடுத்து சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு தடுப்பு கூடுதல் ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் நேரடியாக சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயமும் மது தயாரிக்க பயன்படுத்திய பாட்டில், மூடி, ஸ்டிக்கர் மற்றும் தளவாடங்கள் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர். மதுபான ஆலை நடத்திய பெண் மங்கலம் உள்பட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்