தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்...சேதி கேட்ட மறுநொடியே மாறிய காட்சிகள்

Update: 2024-04-17 09:19 GMT

தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏராளமான மதுப்பிரியர்கள் கூடினர். இதனால், அந்த கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏராளமான கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மேலும், திருச்சியில் மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஏராளமான மதுப்பிரியர்கள், மதுபானங்களை வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்