தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - வெளிவந்த பரபரப்பு பின்னணி

Update: 2024-04-24 15:08 GMT

மயிலாடுதுறையில் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,

இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தர்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வழிபாட்டிற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் இடையூறு அளித்ததாகவும், கோயில் அர்ச்சகரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். திருவிழாவிற்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்