ராமேஸ்வரம் கடலுக்குள் தங்கம்... வெளியான ரகசிய தகவல்

Update: 2024-04-05 11:30 GMT

இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை, படகு மூலம் 3 பேர் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மண்டபம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை, மணலி தீவில் தூக்கி வீசப்பட்டதாக கூறியதை அடுத்து, ஸ்கூபா வீரர்கள் மற்றும் முத்துக்குளிக்கும் நபர்கள் உதவியுடன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்