"கோயில் நிதியில் அறநிலையத்துறை ஊழியர்கள் முறைகேடு" - முன்னாள் ஐ.ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-04-27 01:47 GMT

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல பெருமாள் கோயிலில், 19க்கும் மேற்பட்ட குற்ற நிகழ்வு நடந்திருப்பதாக கூறி முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குற்றம் சுமத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோயிலில் கடந்த 2017 -18 காலகட்டங்களில்,19க்கும் மேற்பட்ட குற்ற நிகழ்வு நடந்திருப்பதாகவும் நம்பிக்கை மோசடி, கையாடல் போன்ற குற்றங்கள் உட்பட அறநிலையத்துறை ஊழியர்களுக்கான சாப்பாட்டு செலவை கோயில் நிதியில் இருந்து எடுத்து சட்டவிரோதமாக பயன்படுத்தி இருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்