அதிர்ச்சி பின்னணியில் அதிமுக புள்ளி.. தோண்டப்பட்ட எஸ்டேட்.. உள்ளே என்ன?

Update: 2024-04-24 03:02 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வன விலங்குகளை கள்ளத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு வேட்டையாடிய வழக்கில், அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

அதிமுகவின் மாநில வர்த்தக அணி தலைவராக இருப்பவர் சஜீவன். இவருக்கு சொந்தமாக, கூடலூர் அடுத்த அள்ளூர் வயலில் 48 ஏக்கர் அளவில் எஸ்டேட் ஒன்று உள்ளது. அங்கு, அதே பகுதியை சேர்ந்த பைசல் மற்றும் சாபு ஜாக்கப் ஆகிய இருவர் கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளனர். இருவரையும் வனத்துறையினர் கைது செய்த போது, இதன் பின்னணியில் சஜீவனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சஜீவன், அவருடைய நண்பர் சுபைர் மற்றும் கள்ளத்துப்பாக்கி பெற்றுத் தந்த ஸ்ரீகுமார் ஆகியோரை வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதனிடையே, சஜீவனின் எஸ்டேட்டில் இருந்து இரண்டு நாட்டு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி.. சஜீவன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது கூடலூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்