ஏவி விட்ட அதிமுக பிரமுகர் - கடை ஓனருக்கு மிரட்டல், தாக்குதல்

Update: 2024-04-24 06:42 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரவுடிகளை ஏவி தாக்கியதாக, அதிமுக பிரமுகர் மீது கடை உரிமையாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதில் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில், நகராட்சியின் இட ஒதுக்கீடு அடிப்படையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டதாகவும், அதிமுக செயலாளர் பாலசுப்ரமணி என்பவர் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வாடகை தர வேண்டுமென, அரிசிக்கடை உரிமையாளரை மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். போதிய வசதிகள் இல்லாததால் வாடகை தர கடை உரிமையாளர் மறுத்த நிலையில், பாலசுப்ரமணி ரவுடிகளை ஏவி கடையை தாக்கிவிட்டு பூட்டிச் சென்று விட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்