அசாம் கணவர் சித்ரவதை - பாதுகாப்பு கேட்டு வந்த பெண்- திடீரென ஆட்டோவில் தப்பிச் சென்றதால் பரபரப்பு

Update: 2024-04-24 02:13 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில், கணவருடன் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அவருடன் செல்ல மறுத்த பெண் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து பாதுகாப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரான இவருக்கு, அசாமை சேர்ந்த வட மாநில இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ள நிலையில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்வதாக கூறிய இப்பெண், மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரினார். இறுதியில் குழந்தைகள் நலத் துறை அதிகாரியிடம் புகாரளித்திருப்பதாக கூறிய அப்பெண் கணவருடன் வாழ மறுத்து.. ஆட்டோவில் குழந்தையுடன் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்