"அரசு பேருந்துகளை பாராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்க" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Update: 2024-04-26 03:45 GMT

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், திருச்சியில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும் போது, நடத்துனர் இருக்கையுடன் வெளியே விழுந்த சம்பவம் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து குறித்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக கூறிய அவர், இனியாவது அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்