வெடித்த மாமியார் - மருமகள் பிரச்சனை 4 பேருக்கு விழுந்த சரமாரி வெட்டு

Update: 2024-04-26 11:14 GMT

கொடைரோடு அடுத்த, அம்மையநாயக்கனூர் அருகே வசிக்கும் ராசு - பாண்டியம்மாள் தம்பதிக்கும், அவரது மருமகள் ஜெயலலிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படவே, ஜெயலலிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இந்த நிலையில், ஜெயலலிதாவின் உறவினர்கள் வீடு புகுந்து, ராசு, அவரது மனைவி பாண்டியம்மாள், இளைய மகன் மருதுபாண்டி உள்ளிட்ட 4 பேரை, அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த 4 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்