என் தாயை பார்த்தீர்களா? என கேட்ட இளைஞர் கொலை - தர்மபுரியில் அதிர்ச்சி

Update: 2024-04-24 02:07 GMT

காட்டூர் ஊரைச் சேர்ந்த திவாகர் என்பவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பில்டிங் காண்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தோட்டத்திற்கு, காட்டூர் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயை பார்த்தீர்களா? என கேட்ட போது, திவாகருக்கும்,சந்திரகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த திவாகர், நான்கு பேரோடு சேர்ந்து, போதையில் இருந்த சந்திரகுமாரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், திவாகர் உள்ளிட்ட இருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 4 பேர் தாக்கிய நிலையில், 2 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக சந்திரகுமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்