தனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல்

Update: 2024-04-24 14:54 GMT

நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை வள்ளியூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள், கோயில் அருகேயுள்ள இடத்தில் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மூவர்... காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துச் சென்ற நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், வள்ளியூரை சேர்ந்த கலையரசன், குட்டி மற்றும் கண்ணன் ஆகிய மூவரை கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்