சென்னையை அலறவிட்ட சம்பவம்.. தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சகோதரரின் சோக பேச்சு

Update: 2024-03-29 10:06 GMT

சென்னையில், மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் வழக்கை முடிக்க பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ், திண்டுக்கலை சேர்ந்த ராஜ் மற்றும் திருநங்கை லில்லி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மெட்ரோ ரயில் பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மேற்கூரை இடிந்திருக்கலாம் மதுபான விடுதி விபத்திற்கு, மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுபான பாரின் மேலாளர் சதீஷ் என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த ராஜ்க்கு, 4 பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், அப்பா வரமாட்டாரா? என கதறி அழும் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் தவிப்பதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்