"யாரு சாமி நீ..!"- பேருந்தில் இருந்தபடியே ஐபிஎல் பார்த்த நபர்... டிரைவர் ஹாரன் அடித்ததால் இளைஞர் வெறிச்செயல்

Update: 2024-04-24 11:47 GMT

பேருந்தில் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் ஐபிஎல் மேட்ச் பார்த்து வந்த இளைஞர் ஒருவர், ஓட்டுநர் அடித்த ஹாரன் சத்தம் இடையூறாக இருப்பதாகக் கூறி ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை சேப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் அமர்ந்து கொண்டு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது இஸ்மாயில் நேற்று நடந்த சென்னை-லக்னோ அணிகள் இடையிலான மேட்ச்சைப் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்... மேட்ச் பார்க்கும் ஆர்வத்தில் இருந்த முகமது பேருந்து ஓட்டுநரிடம் ஆர்ன் அடிப்பது தொந்தரவாக இருப்பதாகவும், அதனால் ஆர்ன் அடிக்காமல் பேருந்து ஓட்டுமாறும் கூறியுள்ளார்... அதன்பிறகு மிகவும் ஆவேசமாக அவர் கத்தவே, பேருந்து ஓட்டுநர் முகமதை பின்னிருக்கையில் அமர்ந்து மேட்ச் பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு முகமது மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதையடுத்து ஓட்டுநரும் நடத்துநரும் முகமதைக் கீழே இறக்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் அவர் கல்லால் பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இஸ்மாயிலைக் கைது செய்த நிலையில், எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்