செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விரக்தி - 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2022-01-27 14:08 GMT
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

கொளத்தூர்ரை சேர்ந்த 16 வயதான சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததை அவரின் தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமி தன் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்