கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-01-27 10:37 GMT
கடலூர் அருகே பழைய அரசு கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், . 

"பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு துயரம் அடைந்தேன்", உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 

மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் குடும்பத்தாருக்கு ரூ.50,000 வழங்கப்படும். விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தர விட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்