சைக்கிளிலேயே சென்று திருட்டில் ஈடுபட்ட 'பலே தாத்தா' - சிக்கவைத்த சிசிடிவி காட்சி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடை ஒன்றில் 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராஜேந்திரன் முதியவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சைக்கிளில் சென்று பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.