நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி சென்னையின் பல்வேறு அரசு கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றன.
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. விழாவையொட்டி, சென்னையின் பல்வேறு அரசு கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றன. சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் இரவு நேர ஊரடங்கில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.