10ம் வகுப்பு மாணவி கர்ப்பமான விவகாரம் - சகோதரர் உள்பட இருவர் கைது

கடலூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக, அவரது சகோதரர் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-16 08:48 GMT
கடலூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக, அவரது சகோதரர் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அருகே பாளையஞ்சேர்ந்தங்குடி கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை, அதே கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் காதலித்து, நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவிக்கும் அவரது பெரியப்பா மகனும் சகோதரருமான மோகன்ராஜ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்த நிலையில், அவரின் தந்தை ஓரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். தொடர்ந்து, இந்தப் புகார் சேத்தியாத்தோப்பு  அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, ஆகாஷ், மோகன்ராஜ் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்