திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100 நபர்களுக்கு பொங்கல் பானை, அரிசி , சர்க்கரை , கரும்பு வழங்கி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் பொங்கியதும் அனைவரும் குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 100 நபர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் என பலர் கலந்து கொண்டனர்.