வீட்டில் திருட வந்தவர் கட்டி வைத்து தாக்குதல் ! - சடலத்தை அணையில் வீசிச் சென்ற கொடூரம்
கோவை அருகே அடித்து கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலந்துரை அருகே சித்திரைச்சாவடி அணையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்துபோன நபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் ஆலாந்துறை சித்திரைச்சாவடியை சேர்ந்த மணி என்பவரது வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. அப்பகுதியை சேர்ந்த தோட்ட உரிமையாளர்கள் வடமாநில இளைஞரை, வீட்டில் கட்டி வைத்து பலமாக தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளைஞரின் உடலை சித்திரைச்சாவடி அணையில் வீசிச் சென்றததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளர் மணி உட்பட ஆலாந்துறையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை குறித்தும், இறந்துபோன வடமாநில இளைஞர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்