"மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரில் சாணம்.. சிலர் தேவையற்ற வதந்தியை பரப்புகிறார்கள்.." மாவட்ட ஆட்சியருக்கு பறந்த புகார் மனு

Update: 2024-04-30 02:21 GMT

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரில் சாணம் கலந்ததாக புகார் வந்ததன் பேரில், அங்கு வாழும் இரு சமூதாய மக்கள் ஒன்றாக சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கந்தர்வகோட்டை தாலுகா சங்கமம் குறுவாண்டான் தெருவில் இரு சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், சாணம் கலந்ததாக புகார் வந்திருந்து. இதையடுத்து அரசு அதிகாரிகள் அந்த நீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூக மக்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். ஊரில் இருசமூகமும் ஒற்றுமையாக இருந்து வரும் நிலையில், எங்களகு ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக ஒரு சிலர் வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்