பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை - சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்

ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-12 20:42 GMT
ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் மற்றும் அமைச்சு பணியாளார்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை, அவர் வழங்கினார். பின்னர் செய்தியளர்களை சந்தித்த ஆணையர் DACO  என்கிற Drive  against Crime offender எனப்படும்  புதிய ஆப்ரேசன் தொடங்கி உள்ளதாக கூறினார். அதன் மூலம் செயின், செல்போன், வழிப்பறி போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஒடுக்க முடியும் என தெரிவித்தார். தற்போது பண்டிகை காலம் என்பதால், கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்