பைக்கில் சென்றவர் தலையில் விழுந்த தென்னை மரம்

Update: 2024-05-08 13:27 GMT

சிதம்பரத்தில் காற்றின் வேகத்தால் தென்னை மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி மூளை சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 49 வயது உதயகுமார் பலத்த காற்று வீசிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்... அப்போது சாலையின் பக்கவாட்டில் இருந்த தென்னை மரம் உதயகுமார் மீது விழுந்ததில், மூளை சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காற்றுடன் மழை பெய்யும்போது பயணங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த விபத்து உணர்த்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்