ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2022-01-11 15:20 GMT
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவனை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.  அந்த வழியாக வந்த போலீசார் இரண்டு மாணவனை பிடித்த நிலையில் மற்ற மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து 2 பள்ளி மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்