காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை - பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பொள்ளாச்சி அருகே காதலியை பார்க்க சென்ற இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-01-11 04:44 GMT
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதாகர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 
வேலை செய்து வந்துள்ளார். இவர், தன்னுடன் தோட்டத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலியை சந்திக்க சென்ற  இளைஞரை தோட்டத்தின் உரிமையாளர் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகலத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்