சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் NFT ஃபிளாட்ஃபார்மில் இசையமைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இசை, புகைப்படங்கள், வீடியோக்களை பிரத்தியேகமாக வழங்கும் ஆன்லைன் தளமாக NFT அறியப்படுகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து NFT பிளாட்ஃபார்மில் இசைத் தொகுப்புகளை உருவாக்க உள்ளதாகவும், இதன்மூலம் இந்திய இசை சமூகத்துக்கு மேலும் வாய்ப்புகள் உருவாகும் என்றும், டுவிட்டரில் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டு உள்ளார். புதிதாக உருவாகிவரும் NFT ஃபிளாட்பார்மில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைவது, சுயாதீன இசையமைப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.