சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-02 00:06 GMT
தமிழக சட்டப்பேரவையில் 11 குழுக்கள் உள்ளன. அதில் நிதி தொடர்புடைய குழுக்களான பொது நிறுவனங்கள் குழு, பொது கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு ஆகியவற்றின் பணிகளை கண்காணிக்க, நாடாளுமன்ற மக்களவை செயலகத்தில் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள எம்.எல்.கே. ராஜா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணைச் செயலாளர் அந்தஸ்தில்  சிறப்பு அதிகாரியாக இங்கு பணியாற்றுவார். அவருக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15ம் தேதியே அதற்கான உத்தரவை நாடாளுமன்ற மக்களவை செயலகம் தமிழகத்திற்கு பிறப்பித்து, தற்போது அவர் பொறுப்பேற்றுவிட்டார். தமிழக சட்டமன்ற வரலாற்றில், தமிழக அரசின் பணிகளை கண்காணிக்க டெல்லியிலிருந்து சிறப்பு அதிகாரி இங்கு பணியாற்றுவது, புதிய நடைமுறை என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்