இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-29 08:10 GMT
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கவின் மற்றும் மகேந்திரன் இருவரும் ஈரோடு - கரூர் சாலையில் உள்ள ஆராம்பாளையம் அருகே சென்ற போது, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமாருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து,  மாணவர்கள் இருவரையும் கட்டிப்போட்டு தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்