ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் - மற்றொரு ரவுடி கூட்டாளியுடன் சரண்

ஓசூரில் ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

Update: 2021-11-23 09:04 GMT
ஒசூர் அருகே தக்கட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 20 ஆம் தேதி மாரச்சந்திரம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் ஏலச்சீட்டின் போது இவருக்கும் மாரச்சந்தையை சேர்ந்த மகேஷ்குமார் என்ற ரவுடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில், ரவுடி சுரேஷ் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி மகேஷ்குமார், சிவா என இருவர் சரண் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்