பாம்பன் பாலத்தில் மோதிய விசைப்படகு - கடலில் த‌த்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

பாம்பன் பாலத்தை கடக்க முயன்ற விசைப்படகு பாலத்தில் மோதி மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-11-14 02:42 GMT
பாம்பன் தென் கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு பாம்பன் பாலத்தை கடக்க முயன்றது. கடலின் நீரோட்டம் மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக அந்த படகு பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் மோதி சேதமடைந்து. இதனால் படகுக்குள் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்கியது. இந்நிலையில் கடலில் த‌த்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களை பிற மீனவர்கள் படகு மூலம் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்