பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-28 10:46 GMT
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார். உண்மைகள் வெளிவரட்டும் என்றும், தனிநபர் சுதந்திரம் காக்கப்பட  வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்