"கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் குறித்து வதந்தி" - காப்பகத்தின் இயக்குனர் வேதனை

கீழ்பாக்கம் அரசு மன நல காப்பகம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-01 18:37 GMT
கீழ்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் ஏராளமானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளை தாக்குவதாகவும், உணவு தராமல் கொடுமைப்படுத்துவதாக பொய்யான தகவல் ஒன்று சமூக வலைதளதில் வலம் வருகிறது. இதுதொடர்பாக, வந்த பரப்புவோரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காப்பகத்தின் இயக்குனரான பூர்ண சந்திரிகா, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காப்பகத்தில் தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வருவதாகவும், இது போன்று சில பொய்யான தகவலால் காப்பகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்