பெரியாரின் 143-வது பிறந்தநாள் - உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

Update: 2021-09-17 05:43 GMT
சென்னை அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மெய்யநாதன், அன்பில் மகேஷ், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்