பட்டீஸ்வரர் கோயில் யானையின் உடல்நலம் - கால்நடை மருத்துவர் நேரில் பரிசோதனை

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள யானைகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-09-14 04:02 GMT
 தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள  யானைகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கோவை பேரூர் 
பட்டீஸ்வரர் கோயிலுக்கு வந்த கால்நடை மருத்துவர் சிவகணேஷ் கல்யாணி யானையை பரிசோதனை செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். யானையின் கண்கள், முகம், தும்பிக்கை, காது மற்றும் வாலின் அசைவின் மூலம் ஆரோக்கிய தன்மையை உணர முடியும் என்றும் 
யானைக்கு அளிக்கப்படும் உணவு குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டறிந்ததாகவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்