வனக்கல்லூரி மாணவர்கள் தர்ணா - பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீக்கப்பட்ட பட்டுப்புழுவியல் துறையை மீண்டும் இணைக்க வேண்டும், பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் மாணவர்கள் தர்ணாவில்ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குநர்கள் அடங்கிய குழு, மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரவு பகலாக மாணவர்களின் போராட்டம் தொடர்வதால் பாதுகாப்புக்கு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.