"சாலையை 30 நாளில் அகற்ற வேண்டும்"- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில், கோயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-09 04:33 GMT
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம், தாக்கல் செய்த மனுவில், பூலாங்குறிச்சியில் உள்ள உருமான் சாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல் தார்சாலை அமைத்துள்ளனர். சாலையை அகற்ற உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். வழக்கு விசாரணையின்போது, அனுமதி பெறாமல் சாலை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்த, சாலையை 30 நாளில் அகற்ற, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திட்ட அலுவலர் ஆகியோருக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்