மாநில மொழிகளில் தேர்வு நடத்த கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

KVPY தேர்வை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Update: 2021-09-09 02:42 GMT
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த பொது நல வழக்கில், KVPY தேர்வு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தாய்மொழியில் கல்வி கற்பதாலேயே, மாணவர்கள் எளிதில் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை புரிந்து கொள்ள முடியும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது என குறிப்பிட்டிருந்தார். மேலும்,  இது போன்ற காரணங்களால், அறிவியல் ஆர்வம் கொண்ட, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், KVPY ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்