கொரோனாவால் உயிரிழந்த மனைவியின் நினைவாக விதைப்பந்துகளை இலவசமாக வழங்கும் கணவர்

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த மனைவியின் நினைவாக 4 லட்சம் விதைப்பந்துகளை இலவசமாக கணவர் வழங்கி வருகிறார்.

Update: 2021-09-07 14:45 GMT
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியை ராதா ஜெயலட்சுமி. இவர் கடந்த மே மாதம், கொரோனா தாக்கி உயிரிழந்தார். அதிக மரக்கன்றுகள் நட வேண்டும் எனும் மனைவியின் ஆசையே நிறைவேற்றும் முயற்சியில், ஆசிரியையின் கணவர் திருமுருகன் இறங்கியுள்ளார். வாகன ஓட்டிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து விதைப் பந்துகளை இலவசமாக அளித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஒவ்வொருவரிடமும் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்தும் அறிவுரை வழங்கி வருகிறார். இயற்கை விரும்பியான மனைவியின் ஆசையை நிறைவேற்றி வருவதாகவும், மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் 4 லட்சம் விதைப்பந்துகளை அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்