குடியரசு தலைவர் இன்று தமிழகம் வருகை - கருணாநிதி உருவ படத்தை திறந்து வைக்கிறார்

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

Update: 2021-08-02 02:10 GMT
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று பிற்பகல் சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் சென்னை வரும் குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், மாலை 5 மணியளவில் தலைமை செயலகம் வரவுள்ளார். அவரை ஆளுநர் பன்வாரிலால் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் சட்ட பேரவை வளாகத்திற்கு அழைத்து செல்கின்றனர். இதனையடுத்து, சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின் ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசு தலைவர், நாளை நீலகிரிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் தமது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 6ம் தேதி டெல்லி திரும்புகிறார். குடியரசு தலைவரின் சுற்றுப் பயணம் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---
Tags:    

மேலும் செய்திகள்