பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் - மேலும் 1 மாதத்திற்கு நீட்டித்தது தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்தற்கு நீட்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்தற்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.