மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

Update: 2021-06-15 10:36 GMT
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.எஸ்.பி விஜயகுமார் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து டி.எஸ்.பி குணவர்மண் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது டேராடூன் விரைந்துள்ளனர். மேலும் சிவசங்கர் பாபா வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாத வகையில் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்