"மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கவும்"- ஆட்சியர் அலுவலகங்களில் காங். சார்பில் மனு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-06-04 10:20 GMT
மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. அதன்படி சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்