களைகட்டும் கள்ளச் சாராய விற்பனை - சாராய ஊறல்களை அழித்த போலீசார்

நெல்லை மாவட்டம் மானூர் குளத்துகரையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-31 08:00 GMT
நெல்லை மாவட்டம் மானூர் குளத்துகரையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருமலாபுரம் பெரியசாமி, மானூர் பிரனிஷ் ஆகியோர் என்பதும், வாகனத்தில் வைத்து, விஷத் தன்மையுள்ள எரிசாராயம் விற்றதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், மடத்தூர் காட்டுப் பகுதியில் சோதனையிட்ட போலீசார், அங்கு சாராயம் காய்ச்சிய மடத்தூர் மார்ட்டின், மானூர் முத்துக்குமார் மற்றும் ஈசாக் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த போலீசார், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்