ஒட்டனேந்தல் சம்பவம் - கமல் கண்டனம்; அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்

விழுப்புரம் ஒட்டனேந்தல் சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-16 12:14 GMT
விழுப்புரம் ஒட்டனேந்தல் சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன் இந்த சம்பவத்தில் அரசின் தலையீடு வலுவானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்