மீனவர்களுடன் படகு மூழ்கியதில் 4 தமிழக மீனவர்கள் மாயம்

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட 8 மீனவர்களுடன் மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

Update: 2021-05-16 05:00 GMT
நாகையை சேர்ந்த மணிவேல் என்பவரது படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என 8 பேர் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  படகு லட்சத்தீவு அருகே சென்று கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதால் கடலில் மூழ்கியதாக தெரிகிறது. அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகு மீனவர்கள் இந்த தகவலை துறைமுகத்துக்கு தெரிவித்துள்ளனர். படகில் இருந்த 8 மீனவர்களின் நிலை கேள்விக்குறி ஆகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்