தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றுள்ளார்.

Update: 2021-05-10 11:08 GMT
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை பதவி ஏற்கவுள்ளனர். மேலும்,  சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன், நாளை மறுநாள் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்