பிறமாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உற்பத்தியான ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பியது குறித்து மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி கை காட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளர்.

Update: 2021-04-27 04:52 GMT
தமிழகத்தில் உற்பத்தியான ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பியது குறித்து மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி கை காட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் உற்பத்தியான ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்புவது குறித்து, மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என தமிழக அரசும், மாநில அரசை கலந்தாலோசித்து தான் அனுப்பினோம் என மத்திய அரசும் மாறிமாறி கை காட்டுவதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றுவது உறுதியாகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்