"கூடுதல் தடுப்பூசி தேவை" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Update: 2021-04-15 12:29 GMT
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதில், தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்