நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Update: 2021-04-12 11:39 GMT
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு 

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.நாட்டுப்புற கலைஞர்கள்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு கொரோனா நிவாரணத்தை அறிவித்துள்ளது,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட் கலைஞர்களுக்கு தலா 2000ரூ சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.அதன்படி 6 ஆயிரத்து 810 கலைஞர்களுக்கு தலா 2000 ரூ வீதம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கி இருந்த நிலையில் புதியதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க  உயர் நீதிமன்றம் அறிவுருத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்